ஓமைக்ரான் கொரோனா வைரஸை எதிர்கொள்ள புதுச்சேரி மாநிலத்தில் முழுமையான திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆப்ரிக்காவில் இருந்து புதுச்சேரிக்கு வந்த 3 பேரை தொடர்ச்சியாக சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருவதாகவும், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மாநில எல்லையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாகவும் கூறினார். மேலும், புதிய வகை வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3rowOXZ
via Read tamil news blog
0 Comments