மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் தாகூர்புகூர் பகுதியில் மின்சாரம் திருடுவதற்காக மின் கேபிள்களை இணைக்க முயன்ற நபர், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மின்சாரம் திருடுவதற்காக மேல்நிலை உயர் அழுத்த மின்சார கேபிள்களை இணைக்க, மரத்தின் மேல் ஏறிய நபர் எரிவதை உள்ளூர் நபர்கள் கண்டனர். அடையாளம் தெரியாத அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனைப்படிக்க...ராமேஸ்வரம்: ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு கடலில் இறங்கி அஞ்சலி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3lo6PMe
via Read tamil news blog
0 Comments