Advertisement

Responsive Advertisement

41 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வேயில் 41 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில், கோவையில் இருந்து மங்களூரு செல்லும் ரயில், நாகர்கோவில்- கோவை உள்ளிட்ட 41 ரயில்களில் முன்பதிவில்லா உள்ளிட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கொரோனா பரவல் காரணமாக விரைவு ரயில்களில் இருந்த முன்பதிவில்லா பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் நீக்கப்பட்டு சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ELcHX2
via Read tamil news blog

Post a Comment

0 Comments