நிலத்தில் உள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன ப்ரளய் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தீவில் இருந்து காலை 10.30 மணி அளவில் ப்ரளய் ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது என கூறியுள்ள டிஆர்டிஓ, 150 முதல் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைக் கூட தாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. ஏவுகணை பரிசோதனை வெற்றியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாராட்டியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mngGmg
via Read tamil news blog
0 Comments