Advertisement

Responsive Advertisement

"உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் நம்பர் 1 மாநிலமாகும்" - அமித்ஷா

உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக மாற்றப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் உறுதியளித்துள்ளார்.

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, முசாஃபர் நகரில் அவர் பரப்புரையில் ஈடுபட்டார். அம்மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் குற்றங்கள் அதிக அளவில் நடந்ததாகவும், கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் அமித் ஷா கூறினார்.

சமாஜ்வாதி கட்சியின் ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த புள்ளிவிவரங்களை அகிலேஷ் யாதவ் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார். இதேபோல, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளையும் அமித் ஷா கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/b6BP52Ojr
via Read tamil news blog

Post a Comment

0 Comments