ஜார்க்கண்ட் மாநிலம் பாகுர் மாவட்டத்தில் பேருந்தும், எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 17 பேர் உயிரிழந்தனர். மற்றும் 26 பேர் காயமடைந்தனர்.
பேருந்தில் ஏறக்குறைய 40 பயணிகள், சாஹிப்கஞ்சில் உள்ள பர்ஹர்வாவிலிருந்து தியோகர் மாவட்டம் நோக்கிச் சென்றபோது, கோவிந்த்பூர்-சாஹிப்கஞ்ச் மாநில நெடுஞ்சாலையில் புதன்கிழமை காலை 8:30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த கோர விபத்தில் பேருந்திற்குள் சிக்கியிருந்த பலர், கேஸ் கட்டர் மூலம் வாகனத்தை பிரித்த பின்னர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அப்பகுதியில் நிலவும் கடும் மூடுபனியே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும், லாரியில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் எதுவும் வெடிக்கவில்லை என்றும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3qWEzCF
via Read tamil news blog
0 Comments