பிரீபெய்டு திட்டங்களில் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.
செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஒருமாத திட்டமாக வழங்கப்படும் வவுச்சர்கள் 28 நாட்கள் செல்லுபடியாபவையாகவே இருக்கின்றன. இதனால் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 30 நாள் செல்லுபடியாகும் வகையில் குறைந்தது ஒரு திட்டத்தையாவது கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 30 நாட்கள் செல்லுபடியாகக் கூடிய வகையில் குறைந்தது ஒரு பிளான் வவுச்சர், சிறப்பு டாரிஃப் வவுச்சர், காம்போ வவுச்சர் ஆகியவற்றை செல்போன் நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். இதன்மூலம் ஆண்டுக்கு பிரீபெய்டு ரீசார்ஜ்களின் எண்ணிக்கை 12ஆக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3rXAeQ6
via Read tamil news blog
0 Comments