Advertisement

Responsive Advertisement

கான்பூரில் தாறுமாறாக சென்ற பேருந்து மோதி 5 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் தாறுமாறாக ஓடிய பேருந்து மோதி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கான்பூரில் வேகமாக சென்ற மின்சாரப் பேருந்து ஒன்று, சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீதும் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்தவர்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏராளமான வாகனங்களும் சேதமடைந்துள்ளன. விபத்தை ஏற்படுத்திவிட்டு பேருந்து ஓட்டுநர் தப்பியோடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

image

பேருந்து மோதி 5 பேர் உயிரிழந்ததற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்தி: அதிமுகவுடன் இழுபறி: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறதா பாஜக?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/hanT0e5xD
via Read tamil news blog

Post a Comment

0 Comments