இதுவரை இல்லாத நிலையில், வெறும் 92 நிமிடத்திலேயே பட்ஜெட் உரையை வாசித்து முடித்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். கடந்த 2020ம் ஆண்டு அவர் தாக்கல் செய்து வாசித்த பட்ஜெட் உரை இந்திய வரலாற்றின் மிக நீண்ட பட்ஜெட் உரையாக கருதப்பட்டது. அந்த பட்ஜெட் மொத்தம் 2மணிநேரம் 40 நிமிடங்கள் வாசிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின்போது 1மணி நேரம் 50 நிமிடங்கள் தனது உரையை நிகழ்த்திய அவர், தற்போது வாசித்த பட்ஜெட் உரையை வெறும் 92 நிமிடங்களில் முடித்துள்ளார். இதுவரை வாசிக்கப்பட்ட பட்ஜெட் உரைகளில் குறைந்த நிமிடங்களே உள்ளடக்கிய உரையாக இது கருதப்படுகிறது. மேலும், தனது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் அவர் உரையை விரைவில் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/tHn7aplkP
via Read tamil news blog
0 Comments