ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் எதிரொலியாக இந்தியாவில் பீர் மதுபானத்தின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பீர் தயாரிக்கும் மூலப்பொருள்களான பார்லி உள்ளிட்டவை ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து இந்தியா உள்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே பார்லி உள்ளிட்ட மூலப் பொருள்களின் உற்பத்தி இருந்தாலும் சர்வதேச சந்தையில் அவற்றின் விலை உயரும் போது அதன் தாக்கம் இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் விலை ஏற்றம் குறித்து மாநில அரசும், உற்பத்தியாளர்களுமே கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள் என சொல்லப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/eLCuqJS
via Read tamil news blog
0 Comments