உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழக அரசின் சிறப்பு குழுவினர் இன்று சந்தித்தனர்.
உக்ரைனில் நடைபெறும் போரால், தாயகம் திரும்ப முடியாமல் தமிழக மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பது தொடர்பான நடவடிக்கைகளுக்காக எம்.பிக்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம். அப்துல்லா, எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவை தமிழக அரசு அமைத்தது.
அந்த குழு இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தது. அதில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் அனைவரையும் விரைந்து மீட்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. இதுவரை 777 தமிழக மாணவர்கள் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பியுள்ளனர். மற்றவர்களையும் விரைந்து மீட்க தமிழக சிறப்பு குழு வெளியுறவுத்துறையை வலியுறுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/o2umpet
via Read tamil news blog
0 Comments