Advertisement

Responsive Advertisement

"மேகதாது விவகாரத்தில் வைகோ காங்கிரஸைக் கண்டிக்காதது ஏன்? " - அண்ணாமலை

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக பாஜகவைக் கண்டித்து நீண்ட ஓய்வுக்குப் பிறகு அறிக்கை கொடுத்திருக்கும் வைகோ, தங்கள் கூட்டணிக் கட்சியில் இருக்கும் காங்கிரஸை ஏன் கண்டிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட கிளம்பியதே அப்போதிருந்த காங்கிரஸ் ஆட்சிதானே என அறிக்கை வாயிலாக வினவியுள்ள அண்ணாமலை, அணை கட்டுவதற்காக பாதயாத்திரை செல்கிறேன் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா சொல்லியிருப்பது வைகோவின் கண்களுக்குப் புலப்படவில்லையா எனக் கேட்டுள்ளார்.

TN BJP Chief Annamalai reacts to KT Raghavan's resignation, questions Madan's intent | The News Minute

நதி நீர் ஆணையமும், உச்சநீதிமன்றமும் அறிவித்த குறைந்தபட்ச நதிநீர் ஒதுக்கீட்டில் ஒரு சொட்டு நீரைக்கூட விட்டுத்தர பாஜக அனுமதிக்காது என தெரிவித்துள்ள அண்ணாமலை, மேகதாது அணையை அரசியலாக்குவது இரு மாநில விவசாயிகளுக்கும் நன்மை தரப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/TQcSqb7
via Read tamil news blog

Post a Comment

0 Comments