Advertisement

Responsive Advertisement

"இந்தியர்களை மீட்க என்னென்ன திட்டங்கள்?" - ராகுல்காந்தி வலியுறுத்தல்

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பான திட்ட விவரங்களை மத்திய அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ராகுல், மேலும் சோகம் நிகழ்வதைத் தவிர்க்க மீட்பு குறித்த தகவல்களை பகிர்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். உக்ரைனிலிருந்து எத்தனை மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர், இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர், பகுதிவாரியாக அவர்களை வெளியேற்ற அரசிடம் உள்ள திட்டங்கள் என்னென்ன? என்பன போன்றவற்றை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்த தெளிவான வியூகங்களை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/YjtJESN
via Read tamil news blog

Post a Comment

0 Comments