Advertisement

Responsive Advertisement

வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளருக்கு நேர்ந்த துயரம் - பதைபதைக்க வைக்கும் காட்சி

ஆந்திர மாநிலத்தில் காவல் ஆய்வாளர் மீது கார் மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில், முஷுராபாத் காவல் ஆய்வாளர் ஜஹாங்கீர் யாதவ், வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற சொகுசு கார், ஜஹாங்கீர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். காயங்களுடன் உயிர் பிழைத்த காவல் ஆய்வாளர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய நபரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அண்மை காலங்களில் இது போன்ற சாலை விபத்துகள் அதிகரித்திருப்பதாக அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.



இதையும் படிக்க: 'டிராஃபிக் ஜாம் தொல்ல தாங்க முடியல சார்!'-6 வயது சிறுவனின் புகாரால் மிரண்டு போன போலீஸார்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Jy5wvEk
via Read tamil news blog

Post a Comment

0 Comments