நீட் தேர்வுக்கு இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வுக்கு இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், வருகிற மே 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதுவரை 84 ஆயிரத்து 214 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கூறுகிறது. நாடு முழுவதும் வரும் ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறவுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/XPFg8mv
via Read tamil news blog
0 Comments