பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம் ஒலிபரப்பாக உள்ள தமது மனதின் குரல் நிகழ்ச்சிக்காக பொது மக்களிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்றுள்ளார்.
88-வது மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 24-ந் தேதி ஒலிபரப்பாக உள்ளது. இது குறித்து, MyGov அழைப்பைப் பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “மனதின் குரல் மூலம் நாம் அடிமட்ட அளவில் மாற்றம் ஏற்படுத்துபவர்களின் அசாதாரணமான சாதனைகளை கொண்டாடி வருகிறோம். இத்தகைய உந்து சக்தியாக திகழும் வாழ்க்கைப் பயணங்களை நீங்கள் அறிவீர்களா? அவற்றை 24-ந் தேதி ஒலிபரப்பாகும் இம்மாத நிகழ்ச்சிக்காக பகிருங்கள். MyGov தளத்திலோ, NaMo செயலியிலோ அல்லது 1800-11-7800 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ பகிர்ந்து கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்
'மான் கி பாத்' எனும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைஎன்று நாட்டுமக்களிடம் உரையாற்றி வருகிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/TzhMbLX
via Read tamil news blog
0 Comments