Advertisement

Responsive Advertisement

’இவரையா காப்பாற்றினோம்’ - மலை இடுக்கில் சிக்கி மீட்கப்பட்ட இளைஞர் மதுபோதையில் ரகளை

கேரளாவில் மலை இடுக்கில் சிக்கி மீட்கப்பட்ட இளைஞர், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

பாலக்காடு அருகே உள்ள செராடு பகுதியைச் சேர்ந்த பாபு என்ற இளைஞர், அங்குள்ள ஒரு மலை இடுக்கில் சிக்கிக் கொண்டார். அவரை ராணுவம் மற்றும் விமானப் படை வீரர்களின் தீவிர முயற்சியால் 44 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பாபு மீட்கப்பட்டார். ஒரு தனிப்பட்ட நபருக்காக ராணுவமே களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டது, அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மீட்பு பணிக்காக 70 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவானதாக கூறப்பட்டது.

image

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாபு பிரபலமானார். பாபுவிற்கு ஏராளமானோர் பண உதவியும் அளித்தனர். அவருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும் என பாலக்காடு எம்.பி. தெரிவித்திருந்தார். இந்நிலையில், மலையில் சிக்கி பிரபலமான பாபு, மதுபோதையில் தரையில் உருண்டு ரகளை செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/HAG0FaE
via Read tamil news blog

Post a Comment

0 Comments