Advertisement

Responsive Advertisement

இறந்த மகனின் உடலை எடுத்து செல்ல ரூ.50,000 லஞ்சம் - பணம் இல்லாததால் பிச்சை எடுத்த பெற்றோர்

இறந்து போன மகனின் உடலை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனைக்கு ரூ.50,000 லஞ்சம் கொடுக்க முடியாததால் வயதான தம்பதியினர் தெருத் தெருவாக பிச்சை எடுத்த கொடுமை பீகாரில் அரங்கேறியுள்ளது.

பீகார் மாநிலம் சமஸ்டிபூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் தாக்கூர். இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சதார் அரசு மருத்துவமனையில் மகனின் உடல் இருப்பதாக கிடைத்த தகவலின்படி உடலை வாங்க தனது மனைவியுடன் சென்றார். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் உடலை தர வேண்டுமானால் 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

image

ரூ.50,000 லஞ்சம் கொடுக்க முடியாததால் வேதனையடைந்த வயதான தம்பதியினர், லஞ்சம் கொடுக்க தெரு தெருவாக பிச்சை எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. இந்நிலையில் லஞ்சம் கேட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

இதையும் படிக்கலாம்: 25 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த குழந்தையை 40 நிமிடங்களில் உயிருடன் மீட்ட அதிகாரிகள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/0A8KdtE
via Read tamil news blog

Post a Comment

0 Comments