வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்புடன், மூதாட்டி ஒருவர் 4 நாட்களாக தங்கியிருக்கும் சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி - பனகட்டி தாலுகா குல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மானஷா. இவரது கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மானஷாவின் வீட்டுக்குள் நல்ல பாம்பு புகுந்துள்ளது. பாம்பை பார்த்தால் படை நடுங்கும் என்பார்கள். ஆனால், மானஷா, இறந்துபோன கணவர் மறுபிறவி எடுத்து நல்ல பாம்பாக வந்திருப்பதாகக் கருதி அதற்கு பால் ஊற்றி வளர்த்து வந்துள்ளார்.
இதையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பாம்பை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் மானஷா, தனது கணவர் தான் பாம்பு உருவில் வந்துள்ளார் எனக் கூறி பாம்பை பிடிக்கக் கூடாது என்றும், வீட்டில் இருந்து வெளியேற்றக் கூடாது என்றும் கூறி தகராறு செய்ததோடு பாம்புடனே இருந்து வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/ugzmSKQ
via Read tamil news blog
0 Comments