பாட்னாவில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தில் திடீரென தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிகார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று 185 பயணிகளுடன் இன்று பிற்பகல் புறப்பட்டது. விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அதன் இடதுபக்க இஞ்சினில் தீப்பொறி ஏற்படுவதை விமானக் குழுவினர் பார்த்து உடனடியாக பைலட்டுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட இஞ்சினை பைலட் உடனடியாக நிறுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, பாட்னா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்தக் காட்சியை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். உடனடியாக தரையிறக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
#Watch | The Patna-Delhi #SpiceJet flight made an emergency landing
— Hindustan Times (@htTweets) June 19, 2022
Full story - https://t.co/ltLJyy3u0l
(HT video) pic.twitter.com/84i4XmGNPe
வீடியோ சோர்ஸ்: இந்துஸ்தான் டைம்ஸ்
இந்நிலையில், விமானம் தரையிறங்கியதும் இஞ்சினில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. பின்னர் ஆய்வு செய்த போது, பறவை மோதியதில் இஞ்சினின் இறக்கைகள் சேதமாகியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் இருந்த பயணிகள் வேறு விமானத்தின் மூலம் டெல்லி சென்றடைந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/a4u8Vyt
via Read tamil news blog
0 Comments