கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் பால்போல் நுரை பொங்கி வழிகிறது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக மண்டியா மாவட்டத்தில் உள்ள கேஆர்எஸ் அணை நிரம்பி வருகிறது. அதேபோல், மைசூர் மாவட்டம் கபினி அணையிலும் நீர் நிரம்பி வருகிறது.
இந்த இரு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடந்த இரண்டு நாட்களாக ஒரு லட்சம் கன அடிக்கு மேலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், கேஆர்எஸ் அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வழியில் உள்ள சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர்வீழ்ச்சியின் அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/ND7wsnm
via Read tamil news blog
0 Comments