Advertisement

Responsive Advertisement

குடியரசு தலைவர் தேர்தல் எப்படி நடக்கிறது? எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு என்ன? -முழு விவரம்

இந்தியாவின் 16-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில் இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் மற்றும் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் யார், யார் என்பது தொடர்பாக விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.

இந்திய குடியரசு தலைவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்வது வழக்கம். இவர்கள் "எலக்ட்ரோரல் காலேஜ்" எனப்படும் வாக்காளர் குழுமம் என்று அழைக்கப்படுவார்கள். சில மாநிலங்களில் மேலவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. அதைப்போல மாநிலங்களவை, மக்களவையில் நியமன உறுப்பினர்களுக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குரிமை கிடையாது. இந்தியாவிலேயே அதிக வாக்கு மதிப்பை கொண்டது உத்தரபிரதேச மாநிலத்தின் எம்.எல்.ஏ. பதவி. அங்கு ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்குமதிப்பு 208 ஆகும். தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 176 ஆகும்.

image

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர் இந்திய குடிமகனாக வாக்குரிமை பெற்றவராக இருக்க வேண்டும். அவர் குறைந்தபட்சமாக 35 வயதை அடைந்திருக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளையும் அவர் பூர்த்தி செய்து இருக்க வேண்டும். 50 முன்மொழிபவர், 50 வழிமொழிபவரை கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ. ஆதரவை பெத்திருந்தால் மட்டுமே குடியரசுத் தலைவர் பதவிக்கான போட்டியிடுவதற்கான வேட்பாளரின் மனு ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்தியாவில் இதுவரை நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல்களில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றவர் நீலம் சஞ்சீவ ரெட்டி. அதுபோல இரண்டு முறை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மட்டுமே. இவர் 1884 முதல் 1963-ம் ஆண்டு வரை பதவிக்காலம் வகித்தார். இவரை அடுத்து சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888-1975 வரை குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். இதையடுத்து ஜாகிர் உசேன் 1897-1969 வரையும், வராஹகிரி வெங்கட கிரி 1894-1980 வரையும் குடியரசுத் தலைவராக பதவி வகித்தனர். இதையடுத்து நடைபெற்ற தேர்தல்களில் பக்ருதீன் அலி அகமது, நீலம் சஞ்சீவ ரெட்டி, கியானி ஜைல் சிங், ஆர்.வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன், ஏ.பி.ஜே.அப்துல் கலாம், பிரதிபா தேவிசிங் பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோர் குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று பதவி வகித்தனர்.

image

தற்போது நாட்டின் 15ஆவது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார். இவருக்கு அடுத்த வாரம் அரசு சார்பில் பிரியாவிடை அளிக்கப்படுகிறது. குடியரசுத்தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு அந்த தலைவரால் பிற தேர்தலில் போட்டியிடலாம். அதனால் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு அந்த தலைவருக்கு அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து விடுவதாக கருதும் பேச்சுக்கே இடமில்லை. குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் விரும்பினால், தொடர்ந்து முழு நேர அரசியலில் ஈடுபட சட்டம் தடையாக இருக்காது. ஆனால், நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகித்த பிறகு அந்த தலைவர் ஆளுநராகவோ, எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ இருக்க பொதுவாகவே விரும்புவதில்லை என்பதே இந்தியா இதுவரை கண்டு வரும் மரபு.

-விக்னேஷ் முத்து

இதையும் படிக்கலாம்: 'விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் நிறைய இருக்கிறது' - சபாநாயகரிடம் வலியுறுத்திய எதிர்கட்சிகள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/YnlAmU9
via Read tamil news blog

Post a Comment

0 Comments