Advertisement

Responsive Advertisement

குஜராத்: நள்ளிரவில் தடம் புரண்ட சரக்கு ரயில்

குஜராத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதில் 16 பெட்டிகள் கவிழ்ந்தன.

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் உள்ள மங்கள் மகுடி ரயில் நிலையம் அருகே இன்று நள்ளிரவு 1 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரத்லம்-மும்பைக்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. ரயிலின் மீது செல்லும் மின் கம்பிகளும் உடைந்துள்ளன. இதனால் ரத்லம் முதல் மும்பை வரையிலான இரு பகுதியிலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மீட்பு மற்றும் பரமாரிப்பு பணியை மேற்கொள்ளும் பொருட்டு இந்த வழித்தடத்தில் இன்று பகல் 12 மணிவரை ரயில் சேவை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிக்கலாம்: பெண் குழந்தைக்காக பெண்ணுக்கு ஆசிட் கொடுத்த பெண்.. கணவருக்கு காப்பு.. அசாமில் பயங்கரம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/v2ofUQi
via Read tamil news blog

Post a Comment

0 Comments