சித்தூர் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற கார் விபத்தில் கர்நாடக மாநில போலீஸ் உதவி ஆய்வாளர் உட்பட 3 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் நகர காவல் துறையில், பணியாற்றி வரும் 2 காவல்துறை உதவி ஆய்வாளர்கள், இரண்டு போலீசர் மற்றும் ஓட்டுநர் உட்பட 5 பேர் குற்றவாளிகளை தேடி திருப்பதி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பூதலாம்பட்டு அருகே உள்ள கொட்டகோட்டா பாலத்தை கடந்து சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டு இழந்து சாலை தடுப்பில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணித்த கர்நாடக மாநில காவல் துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் அணில், போலீஸ் காவலர் அணில் மாலிக் மற்றும் ஓட்டுநர் ஜோசப் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி உயிரிழந்தனர்.
மேலும் இதில் பயணம் செய்த உதவி காவல் ஆய்வாளர் தீக்ஷித் மற்றும் போலீஸ் காவலர் சரணபசவா ஆகிய இரண்டு பேர் படுகாயங்களுடன் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சித்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஷாந்த் ரெட்டி தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/PQzitsA
via Read tamil news blog
0 Comments