Advertisement

Responsive Advertisement

ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொல்லப்பட்ட நபர்.. அதிர்ந்து போன போலீஸ்.. உ.பியில் பயங்கரம்!

குடி போதையில் தாய் வழி உறவினரை கழுத்தை நெறித்து கொன்ற கோலு மிஷ்ரா என்பவரை கைது செய்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தின் அயோத்யாவில் இன்று (ஜூலை 3) நடந்திருக்கிறது.

கொல்லப்பட்ட நபர் பங்கஜ் சுக்லா (35) அமேதியை சேர்ந்தவர் என்றும், இவர் அயோத்யாவின் புஹாபுர் பகுதியில் உள்ள தாய்வழி தாத்தாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அங்கு பங்கஜ் சுக்லாவும், கோலு ஷர்மாவும் இணைந்து நேற்று இரவு (ஜூலை 2) மது குடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதனை அவமானமாக கருதிய கோலு ஷர்மா பயங்கரமான ஆயுதத்தை எடுத்துக்கொண்டு, கோவில் அருகே இருந்த பங்கஜ் சுக்லாவை தாக்குவதற்கு சென்றிருக்கிறார். அங்கு அவரது கழுத்து துண்டித்து கொன்றுவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பியோடியிருக்கிறார்.

மறுநாள் காலை கோவில் அருகே ரத்த வெள்ளத்தில் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அயோத்யா போலீசார் விரைந்து சென்று பங்கஜ் சுக்லாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

அதன்படி மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரவே தப்பியோடிய கோலு ஷர்மாவை கைது செய்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷைலேஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

ALSO READ: 

29வது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை; கதறிய பெற்றோர்.. நியூயார்க்கில் நடந்த பரிதாபம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/M15nEGK
via Read tamil news blog

Post a Comment

0 Comments