Advertisement

Responsive Advertisement

ம.பி: சிறுவனை விழுங்கியதாக முதலைக்கு டார்ச்சர் கொடுத்த கிராம மக்கள் - வீடியோ!

மத்தியப்பிரதேசத்தில் சிறுவனை முழுங்கிவிட்டதாக கருதி முதலையை பிடித்த மக்கள், சிறுவனின் பெயரைக் கூறி வெளியே வருமாறு அழைத்த விநோத நிகழ்வு நடந்துள்ளது. ஷியோபூர் பகுதியில் உள்ள சம்பல் ஆற்றுக்கு சென்ற 7 வயது சிறுவன் குறித்தநேரத்தில் வீடு திரும்பவில்லை. அவரை முதலை முழுங்கியிருக்கக்கூடும் என கருதிய கிராம மக்கள் 13 அடி முதலை ஒன்றை பிடித்தனர்.

மேலும் அந்த முதலையின் வாய் மூடாதபடி இரு தாடைகளுக்கு இடையே கம்பை வைத்த மக்கள், சிறுவனின் பெயரைக் கூறி வெளியே வருமாறு அழைத்தனர். மறுநாள் காலையில் சிறுவனின் உடல் ஆற்றில் மிதப்பதை அறிந்தபின்னரே, முதலையை கிராம மக்கள் விடுவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/wYePlrZ
via Read tamil news blog

Post a Comment

0 Comments