Advertisement

Responsive Advertisement

செய்தி நிறுவனங்களுடன் கூகுள், பேஸ்புக் வருவாயை பகிர வேண்டும் - IT சட்டத்தில் திருத்தம்?

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள், செய்தி வெளியீட்டாளர்களின் உள்ளடக்கத்தை தங்கள் தளங்களில் காண்பிப்பதன் மூலம் சம்பாதித்த வருவாயை விரைவில் அந்தந்த நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Govt mulls IT law revision to make Google, Facebook share revenue with news outlets - India News

2021 டிசம்பரில் இந்திய அரசாங்கம், பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் உள்ளூர் வெளியீட்டாளர்களின் செய்தி உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்தும் திட்டம் இல்லை என்று தெரிவித்தது. இருப்பினும், இந்தியா டுடே குழுமம் உட்பட இந்தியாவின் சில பெரிய ஊடக நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பான டிஜிட்டல் செய்திகள் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் (DNPA) புகாரைத் தொடர்ந்து , இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) கூகுளின் ஆதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணைக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரவிட்டது.

Committed to the interest of India's Digital News Industry, DNPA draws plan for coming financial year

செய்தி நிறுவனங்களின் இணையதளங்களில் மொத்த வருவாயில் 50% க்கும் அதிகமானவை கூகுள் மூலம் அனுப்பப்படுவதாகவும் கூகுள், அதன் அல்காரிதம்கள் மூலம், எந்த செய்தி இணையதளம் அதன் தளங்களில் முதலில் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் “தற்போது தொழில்நுட்ப ஜாம்பவான்களால் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் விளம்பரத்தின் சந்தை சக்தி, இந்திய ஊடக நிறுவனங்களை பாதகமான நிலையில் வைக்கிறது. இது ஒரு பிரச்சினை. புதிய சட்டங்கள் மற்றும் விதிகளின் பின்னணியில் இது தீவிரமாக ஆராயப்படுகிறது.” என்று தெரிவித்தார்.

Rajeev Chandrasekhar resigns from Asianet's board - The Hindu

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற உலகளாவிய இணைய ஜாம்பவான்கள், இந்தியாவில் வருவாய்ப் பகிர்வு போன்ற கோரிக்கைகளுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற சில நாடுகளில் வருவாயைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தங்களை அவர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற இடைத்தரகர் தளங்களுக்கு இடையே வருவாயைப் பகிர்ந்து கொள்வதில் நியாயத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சட்டத்தை கனடிய அரசாங்கம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/knSZaqd
via Read tamil news blog

Post a Comment

0 Comments