ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் பெட்ரோல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 2022-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வருவதாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்திருக்கிறார்.
மேலும் இந்த விலை குறைப்பு சலுகை இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் பாதிப்பைக் குறைக்க விலை குறைப்பை அமல்படுத்துவதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/33ZIBlH
via Read tamil news blog
0 Comments