பாஜகவுக்கு ஒரு கோடி வாக்கு கிடைத்தால் ரூ.70க்கு மதுபானம் விற்கப்படும் என ஆந்திர மாநில பாஜக தலைவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு நேற்று விஜயவாடாவில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “வரும் 2024-இல் ஆந்திர மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும். அதற்கு மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
பாஜகவுக்கு மக்கள் ஒரு கோடி வாக்களித்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ரூ.70 விலையில் மதுபானங்களை வழங்குவோம். தவிர அதிக அளவில் நிதி இருந்தால் ரூ.50 விலையில் மதுபானம் அளிக்கப்படும்” என அவர் கூறினார்.
இதையும் படிக்க: ”வரும் மாநகராட்சி தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்”- சீமான் தகவல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mC7JFO
via Read tamil news blog
0 Comments