அன்னை தெரசா மிஷினரி சேவை நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.
கிறிஸ்துமஸ் அன்று, மத்திய அரசு இந்தியாவில் உள்ள அன்னை தெரசா சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியதாகவும், இதனால் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகள் இன்றி தவித்து வருவதாகவும் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார். ''சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளை சமரசம் செய்யக்கூடாது'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3eu177H
via Read tamil news blog
0 Comments