உத்தராகண்டில் 'Uncle’ என அழைத்த இளம்பெண்ணை பலமாக தாக்கிய 35 வயது கடைக்காரர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சித்தர்கஞ்ச் நகர் பகுதியில் இயங்கிவரும் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு 18 வயது இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். அங்கிருந்த கடைக்காரரை ‘Uncle’ என அழைத்துள்ளார் அந்த பெண். அதைக்கேட்டு சினம் கொண்ட சிங்கமாக மாறிய 35 வயது மதிக்கத்தக்க அந்த கடைக்காரர் இளம்பெண்ணை பலமாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. பெண்ணை தாக்கிய கடைக்காரர் மீது இந்திய தண்டனை சட்டம் 323, 354 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. “அந்த பெண் ‘Uncle’ என அழைத்த காரணத்தினால் கடைக்காரர் மோகித் குமார் ஆத்திரமடைந்து இதை செய்துள்ளார் என்பதை எங்களது முதற்கட்ட விசாரணையில் தெரிந்துகொண்டோம்” என சித்தர்கஞ்ச் பகுதி காவல் நிலைய அதிகாரி பிரகாஷ் தாணு தெரிவித்துள்ளார்.
கடந்த 19-ஆம் தேதி தாக்குதலுக்கு ஆளான இளம்பெண், மோகித் குமாரின் கடையில் பேட்மிண்டன் ராக்கெட் வாங்கியுள்ளார். அதன் ஸ்ட்ரிங் சில விடுபட்டிருந்த காரணத்தால் அதை மாற்ற வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3JwghYC
via Read tamil news blog
0 Comments