Advertisement

Responsive Advertisement

ஜனவரி 2ஆம் வாரத்தில் நாடு திரும்புகிறார் ராகுல் காந்தி

தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஜனவரி 2-ஆவது வாரம் இந்தியா திரும்புகிறார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், ராகுல் வெளிநாடு சென்றிருக்கிறார். ராகுல் தேர்தல் பரப்புரையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால், அது காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

image

விரைவில் தேர்தலை சந்திக்கும் 5 மாநிலங்களில் பஞ்சாப் மற்றும் உத்தராகண்ட்டில் காங்கிரஸூக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ராகுல் வெளிநாடு சென்றிருப்பது கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இவ்விரு மாநிலங்களிலும் உள்கட்சிப் பூசலில் சிக்கியிருக்கும் காங்கிரஸ் கட்சிக்காக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ராகுல் உள்ளார். வெளிநாட்டில் உள்ளபோதிலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ராகுல் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/34qtVMN
via Read tamil news blog

Post a Comment

0 Comments