Advertisement

Responsive Advertisement

5 மாநில தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிப்பு

இந்தியாவில் 5 மாநில தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா மாநில பேரவைத் தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் திட்டமிட்டபடி தேர்தல் நடத்த இருக்கிறது தேர்தல் ஆணையம்.

ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவலுக்கு நடுவே தேர்தல் நடத்தப்படுவதால் அந்தந்த மாநில தேர்தல் ஏற்பாடுகளை மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்திவருகின்றனர். மேலும், அனைவரையும் தடுப்பூசி செலுத்துமாறு வலியுறுத்தி சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3FbYu5j
via Read tamil news blog

Post a Comment

0 Comments