இந்தியாவின் உயரமான மனிதரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாதி கட்சியில் இணைந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
உத்தரபிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மேந்திர பிரதாப் சிங், 8 அடி 1 இன்ச் உயரம் உடையவர். இந்தியாவின் உயர்ந்த மனிதர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார்.
அகிலேஷ்யாதவின் தலைமை பொறுப்பு மற்றும் சமாஜ்வாதி கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்திருப்பதாக தர்மேந்திர பிரதாப் சிங் கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சிக்காக பரப்புரைகளிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3FZpMMK
via Read tamil news blog
0 Comments