உலக நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலையுடன் ஒப்பிடும்போது இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். பாங்க் ஆப் பரோடா ஆண்டுக் கருத்தரங்கில் பங்கேற்ற அவர், அமெரிக்க டாலருக்கு எதிரான மற்ற நாடுகளின் கரன்சி மதிப்பு வீழ்ச்சியைவிட இந்திய ரூபாய் மதிப்பு வலுவாகவே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ரூபாய் மதிப்பின் அதிக ஏற்றத்தாழ்வு விவகாரத்தில் ரிசர்வ் வங்கி விழிப்புடன் செயல்படுவதாகவும் அதன் நடவடிக்கைகளால் மற்ற நாடுகளைவிட ரூபாய் வீழ்ச்சி கட்டுப்படுத்தப்படுவதாகவும் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/pELxjGw
via Read tamil news blog
0 Comments