Advertisement

Responsive Advertisement

பஞ்சாபில் உதயமானது விவசாய சங்கங்களின் அரசியல் கட்சி

பஞ்சாபில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் ஒருங்கிணைந்து, அரசியல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. 22 விவசாய சங்கங்கள் இடம்பெற்றுள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சா சார்பில் புதிதாக உதயமாகிவுள்ள இந்த அரசியல் கட்சிக்கு சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என பெயரிடப்பட்டுள்ளது.
 
நேரடியாக தேர்தல் அரசியலில் குதிக்கும் வகையில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளதால் விவசாய சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள் அனைவரும் சண்டிகருக்கு வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் இந்தப் புதிய கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடக்கூடும் என கூறப்பட்ட நிலையில், பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mupiY8
via Read tamil news blog

Post a Comment

0 Comments