பீகார் மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், அம்மாநில பாஜக-வின் முக்கிய தலைவருமான நாராயண் பிரசாத்தின் மகன் பப்லு குமாரை (Bablu Kumar) அங்குள்ள ஹரடியா கோரி தோலா (Haradiya Koeri Tola) கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் வெறிகொண்டு தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றுள்ளது.
சம்பவத்தன்று தனது தந்தையாருக்கு சொந்தமான மாங்காய் தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை விரட்டும் நோக்கில் வானத்தை நோக்கி தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார் பப்லு குமார். அதனால் அலறியடித்துக் கொண்டு ஓடிய போது ஆறுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
Bihar Minister's son Bablu Kumar opens fire in air to chase kids playing cricket. Minister Narayan Prasad gives 'locals encroaching' defence.
— TIMES NOW (@TimesNow) January 24, 2022
6 injured in the incident. No action against minister's son yet.
Saket with analysis.#Bihar #BabluKumar pic.twitter.com/ER3LTB3t4m
தொடர்ந்து ஆவேசமடைந்த கிராம மக்கள் பப்லு மற்றும் அவருடன் வந்திருந்தவர்களை தாக்கியுள்ளனர். மேலும் அவரிடமிருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டுள்ளனர். அவர் வந்திருந்த வாகனத்தையும் சூறையாடி உள்ளனர். அதனால் தற்போது அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு தரப்பிலும் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக அமைச்சரின் மகன் தாக்கப்பட்ட விவகாரம் தேசிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3rL1iSn
via Read tamil news blog
0 Comments